/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெறிநாய்கள் குதறி 2 ஆடுகள் உயிரிழப்பு
/
வெறிநாய்கள் குதறி 2 ஆடுகள் உயிரிழப்பு
ADDED : நவ 18, 2024 03:39 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் பஞ்., தெற்கு அய்யம்பாளை-யத்தை சேர்ந்தவர் நல்லுசாமி; ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடு-களை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார்.
அங்கு மேய்ந்து கொண்டி-ருந்த ஆடுகளை, கூட்டமாக வந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறின. இதில், 2 ஆடுகள் சம்பவ இடத்திலேயே இறந்-தன. சில ஆடுகள் குடல் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்-தன. ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நல்லுசாமி, சம்ப-வத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு, 30,000 ரூபாய் இருக்கும். வெறிநாய்களை கட்டுப்படுத்த, கடவூர் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.