/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி
/
மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியதில் 2 பேர் பலி
ADDED : டிச 03, 2024 01:37 AM
மாவட்டத்தில் மின்சாரம்
தாக்கியதில் 2 பேர் பலி
கரூர், டிச. 2-
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகர், தெற்கு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் ராகுல், 24; வெல்டர். இவர், நேற்று முன்தினம் காகித ஆலை பாய்லர் பிரிவில், வெல்டிங் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த ராகுல், கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
உயிரிழந்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த கலிங்க துரை மனைவி யேசு ரத்தினம், 62; இவர், நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில், மின் இணைப்பு கொடுக்கும் பணியில் இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், படுகாயமடைந்த யேசு ரத்தினம், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.