sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு 2,179 தேர்வர்கள் பங்கேற்பு

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு 2,179 தேர்வர்கள் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு 2,179 தேர்வர்கள் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு 2,179 தேர்வர்கள் பங்கேற்பு


ADDED : ஜூன் 16, 2025 07:36 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், புனித தெரசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 முதல் நிலை தேர்வு, நேற்று நடந்தது.

இதை கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிகவரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட காலியிடங்களை நிரப்ப குரூப்--1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மாவட்டத்தில், 13 மையங்களில் குரூப்--1 மற்றும் குரூப்--1ஏ முதல்நிலை போட்டித்தேர்வு நடந்தது.

இதில், 2,894 தேர்வர்கள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், 2,179 பேர் தேர்வு எழுதினர். 715 பேர்கள் தேர்வு எழுத வரவில்லை. அனுமதி சீட்டு உள்ள தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே மொபைல்போன், மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோக பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us