/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
238 கிலோ பட்டுக்கூடு ரூ. 1.55 லட்சத்துக்கு ஏலம்
/
238 கிலோ பட்டுக்கூடு ரூ. 1.55 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 21, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரத்தில் நேற்று நடந்த ஏலத்தில், 238 கிலோ பட்டுக்கூடு, 1.55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 238 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. இதில், அதிகபட்சமாக கிலோ, 715 ரூபாய், குறைந்தபட்சமாக, 600 ரூபாய், சராசரியாக, 651 ரூபாய்க்கு விற்பனையானது. 238 கிலோ பட்டுக் கூடு, 1.55 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.