ADDED : செப் 24, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், நவராத்திரி விழா, இரண்டாவது நாளையொட்டி, கரூர் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சிறப்பு கொலு அலங்காரம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ பெருவிழா, நேற்று முன்தினம் தொடங்கியது.
நேற்று இரவு இரண்டாவது நாளையொட்டி, கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், கொலு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.