sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த விருதுக்கு தேர்வு

/

கரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த விருதுக்கு தேர்வு

கரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த விருதுக்கு தேர்வு

கரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த விருதுக்கு தேர்வு


ADDED : நவ 16, 2024 01:24 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூரில் 3 அரசு பள்ளிகள்

சிறந்த விருதுக்கு தேர்வு

கரூர், நவ. 16-

கரூர் மாவட்டத்தில், மூன்று அரசு பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருது வழங்கப்பட்டது.

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், சிறந்த கற்றல், கற்பித்தல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பள்ளிகளுக்கு, விருது வழங்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டு, கரூர் மாவட்டத்தில் தான்தோன்றிமலை பஞ்., யூனியனில் கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குளித்தலை பஞ்., யூனியனில் ஆதிநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, க.பரமத்தி பஞ்., யூனியனில் தென்னிலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பரணிதரனுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் விருது வழங்கினார். தான்தோன்றிமலை வட்டார கல்வி அலுவலர் கவுரி, பள்ளி ஆசிரியர்கள் தெரசாமணி, சுமதி ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல், மற்ற இரண்டு பள்ளிகளுக்கும் விருது வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us