sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.1.62 கோடியில் 3 கால்நடை மருந்தகம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு

/

ரூ.1.62 கோடியில் 3 கால்நடை மருந்தகம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு

ரூ.1.62 கோடியில் 3 கால்நடை மருந்தகம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு

ரூ.1.62 கோடியில் 3 கால்நடை மருந்தகம்: வீடியோ கான்பரன்சில் முதல்வர் திறப்பு


ADDED : ஆக 21, 2024 02:52 AM

Google News

ADDED : ஆக 21, 2024 02:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை;குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டி, தோகைமலை, கடவூரில் புதிதாக கட்டப்பட்ட, 3 கால்நடை மருந்தகங்களை, வீடியோ கான்பரன்சில், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த பஞ்சப்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தலா, 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள, மூன்று கால்நடை மருந்தகங்கள் திறப்பு விழா, நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். கலெக்டர் தங்கவேல், குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம், கரூர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சாந்தி, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகேந்திரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.

குளித்தலை உதவி இயக்குனர் (பொ) ராஜேந்திரன், கால்நடை உதவி மருத்துவர்கள் மலைராஜ், சிவானந்தம், திருமுருகன், கவுதம், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல், தோகைமலை, தரகம்பட்டியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், சிவகாமசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us