ADDED : ஜூன் 09, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பணம் வைத்து சூதாடிய, நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், கோவிந்தம்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பணம் வைத்து சூதாடிக்-கொண்டிருந்த குணசேகரன், 48, செந்தில்குமார், 43, ராசப்பன், 50, மூர்த்தி, 47, உள்பட, நான்கு பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.