/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாணவி, தாய்-மகள் உள்பட 4 பேர் மாயம்
/
மாணவி, தாய்-மகள் உள்பட 4 பேர் மாயம்
ADDED : செப் 29, 2025 01:58 AM
ஈரோடு:ஈரோட்டை அடுத்த வடுகபட்டி வாங்கலாம்வலசு கரட்டூர் காலனியை சேர்ந்த சேகர் மகள் தீபிகா, 15; அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி. பள்ளி செல்ல விரும்பாமல் மொபைல்போனில் விளையாடி கொண்டிருந்ததால், தாய் செல்வி கண்டித்துள்ளார். இதனால் கடந்த, 26ம் தேதி நள்ளிரவில் மாயமாகி விட்டார். செல்வி புகாரின்படி அறச்சலுார் போலீசார் தேடி வருகின்றனர்.
* அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூரை சேர்ந்தவர் தேவராஜ், 26; நகைக்கடை ஊழியர். இவரது மனைவி தர்னிஷா, 23; தம்பதிக்கு நான்கு வயதில் மகள் உள்ளார். கடந்த, 20ல் நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டுக்கு, மகளுடன் சென்ற தர்னிஷா மாயமாகி விட்டார். தேவராஜ் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், இருவரையும் தேடி வருகின்றனர்.* பவானி அருகே கேசரிமங்கலத்தை குதியை சேர்ந்தவர் ராமநாதன் மகன் கவுரி சங்கர், 19; வெப்படை தனியார் மில் தொழிலாளி. மூன்று நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த நிலையில் கவுரி சங்கர் மாயமாகி விட்டார். தந்தை ராமநாதன் புகாரின்படி பவானி போலீசார் தேடி வருகின்றனர்,