ADDED : டிச 31, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த சிவாயம், செவந்திப்பூ நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக, குளித்-தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு தகவல் வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மாலை, குளித்தலை இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலை-மையில் போலீசார், சம்பவ இடத்தை சுற்றிவ-ளைத்தனர்.
அப்போது, சேவல் சண்டை நடத்திக்கொண்டி-ருந்த, வை.புதுாரை சேர்ந்த ராஜேந்திரன், 30, வயலுார் சதீஷ்குமார், 28, சிவாயம் பழனிச்சாமி, 45, திருச்சி மாவட்டம், காடுவெட்டி பகுதியை சேர்ந்த சதீஷ், 26, மணிகண்டன், 26, ஆகிய, ஐந்து பேரை பிடித்து கைது செய்தனர்.

