sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: கரூர் மாநகராட்சியில் அமல்

/

சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: கரூர் மாநகராட்சியில் அமல்

சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: கரூர் மாநகராட்சியில் அமல்

சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: கரூர் மாநகராட்சியில் அமல்


ADDED : நவ 05, 2024 01:52 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சொத்து வரி 6 சதவீதம் உயர்வு: கரூர் மாநகராட்சியில் அமல்

கரூர், நவ. 5-

கரூர் மாநகராட்சியில், 6 சதவீதம் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி நிர்வாகத்துக்கு, பல்வேறு வரிகள் மூலம் வருமானம் வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டு மாநகராட்சிகள், நகராட்சிகள், டவுன் பஞ்.,கள் சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. குறைந்தபட்சம், 25 சதவீதம் முதல் அதிகபட்சம், 150 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டது. வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 100 சதவீதம், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டடங்களுக்கு, 75 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. உயர்த்தப்பட்ட சொத்துவரி சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபட்டது. இந்நிலையில், மீண்டும் கரூர் மாநகராட்சியில் சொத்து வரி, 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்., முதல் செப்., வரை அரையாண்டு, அக்., முதல் மார்ச் வரை இரண்டாம் அரையாண்டு வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில், உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தி கொள்ள, நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை வெளியிட்டது. அதன்படி சென்னை, கோவை உள்பட சில மாநகராட்சிகளில், 6 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்தி, கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கரூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வு குறித்த தீர்மானம் வைக்கப்படவில்லை.தற்போது அக்டோபர் முதல், 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதில், ஒரு மாதத்திற்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் (அதிகபட்சம், 5,000 ரூபாய்)

ஊக்கத்தொகை வழங்கப்படும். அரையாண்டுக்குள் வரி செலுத்தவில்லை என்றால், 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். தற்போது, நேரடியாக அல்லது ஆன்லைன் மூலம் வரி செலுத்த செல்லும் போது, பலருக்கு வரி உயர்வு பற்றி தெரியவந்துள்ளது. இன்னும், கரூர் மாநகராட்சி சார்பில் சொத்து வரி குறித்து அறிவிப்பு வரவில்லை.

இவ்வாறு கூறினர்.

இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் சுதா கூறுகையில்,'' தமிழக அரசு ஆணையின்படி, 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2022 ஏப்ரலில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் சொத்து, காலிமனை வரியை, 6 சதவீதம் அல்லது ஐந்து ஆண்டுகளில் மாநில உள்நாட்டு உற்பத்தியில் எது அதிகமோ, அதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டு சீராய்வு செய்து கொள்ளலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், இவ்வரி உயர்வுக்கு தீர்மானம் நிறைவேற்ற அவசியமில்லை,'' என்றார்.






      Dinamalar
      Follow us