sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி கரூரில் இருந்து 69 ஏற்றுமதியாளர்கள் பயணம்

/

ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி கரூரில் இருந்து 69 ஏற்றுமதியாளர்கள் பயணம்

ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி கரூரில் இருந்து 69 ஏற்றுமதியாளர்கள் பயணம்

ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சி கரூரில் இருந்து 69 ஏற்றுமதியாளர்கள் பயணம்


ADDED : டிச 30, 2024 02:14 AM

Google News

ADDED : டிச 30, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: ஜெர்மனியில், ஜன., 14ல் தொடங்கும் வீட்டு உபயோக ஜவுளி கண்காட்சியில் பங்கேற்க கரூரில் இருந்து, 69 ஏற்றுமதியாளர்கள் செல்கின்றனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், 600க்கும் மேற்பட்டவை உள்-ளன. இங்கு ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைகுட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்-யப்படுகிறது. இவை பிரான்ஸ், ஜெர்மன், இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரே-லியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகி-றது.

இதன்மூலம் ஆண்டுக்கு, 6,670 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில், ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில், உலகளாவிய வீட்டு உபயோக ஜவுளி கண்-காட்சி நடப்பது வழக்கம். இந்தாண்டு ஜன., 14ல் ஜவுளி கண்-காட்சியில் பங்கேற்க, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் தயாராகி வருகின்றனர்.

இது குறித்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் சங்க செயலாளர் சுகுமார் கூறியதாவது:

வரும் ஜன., 14, 15, 16, 17 ஆகிய நாட்களில் ஜெர்மனி நாட்டின் பிராங்பர்ட் நகரில் கண்காட்சி நடக்கிறது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து, 69 ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்-கின்றனர். இங்கு, 3,000க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவ-னங்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் தங்களது பொருட்-களை காட்சிப்படுத்த உள்ளனர். இந்தியாவில் இருந்து, 500க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து, கரூர் ஏற்றுமதியாளர் ஸ்டீபன் பாபு கூறுகையில், '' கம்பளி, பருத்தி, செயற்கை நாரிழை, பட்டு, கச்சா பட்டு உற்-பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் அரங்கு-களை அமைந்து வருகின்றன. கடந்த ஆண்டை விட, இந்தாண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,''






      Dinamalar
      Follow us