sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்

/

குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்

குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்

குண்டும், குழியுமான சாலை: தவிக்கும் பொது மக்கள்


ADDED : ஜூன் 06, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 18-வது வார்டில் உள்ள ராஜா நகரில், 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள, 7, 8 வது குறுக்கு சந்துகளில் சாலைகள் அமைக்கப்பட்டு, 15 ஆண்டுகளுக்கும் மேலாவதால், சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கழிவுநீர் வாய்க்கால் வசதியும் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம் போல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீரில், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கிறது.சாலையை சீரமைக்க கோரி, அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும், சீரமைக்கப்படவில்லை. விரைந்து சாலையை சீரமைத்து, கழிவுநீர் வசதி இல்லாத இடங்களில், வாய்க்கால் அமைத்து தரவேண்டும்.






      Dinamalar
      Follow us