sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தரணும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

/

புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தரணும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தரணும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தரணும்: பொதுமக்கள் வலியுறுத்தல்


ADDED : மே 28, 2024 07:03 AM

Google News

ADDED : மே 28, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் - ஈரோடு ரயில்வே இருப்பு பாதை வழியில், புகழூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கரூர் - ஈரோடு ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக ரயில்வே போக்குவரத்து நடந்து வருகிறது. திருச்சி உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இருந்து கரூர் வழியாக ஈரோடு மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு நாள்தோறும், 15க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இதனால், ரயில்கள் செல்லும் போது, புகழூரில் உள்ள கேட் மூடப்படுகிறது.

அந்த சமயத்தில் வேலாயுதம்பாளையம், புகழூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கு வாகனங்களில் விரைவாக செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:புகழூரில் டி.என்.பி.எல்., காகித ஆலை செயல்படுகிறது. மேலும் அந்த பகுதிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அதனிடையே ரயில்வே இருப்பு பாதை அமைக்கப்பட்ட போதே, உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால், கட்டவில்லை. தற்போது, கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடம், மின் தடமாக மாற்றப்பட்டுள்ளது. அதிக ரயில்கள் செல்ல துவங்கியுள்ளது. அதிக வேகத்தில், ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் ரயில்களில் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். இதனால் புகழூரில், கரூர்-ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us