sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

உரிய விலை கிடைக்க க.பரமத்தியில்மஞ்சளுக்கு விற்பனை கூடம் தேவை

/

உரிய விலை கிடைக்க க.பரமத்தியில்மஞ்சளுக்கு விற்பனை கூடம் தேவை

உரிய விலை கிடைக்க க.பரமத்தியில்மஞ்சளுக்கு விற்பனை கூடம் தேவை

உரிய விலை கிடைக்க க.பரமத்தியில்மஞ்சளுக்கு விற்பனை கூடம் தேவை


ADDED : மே 04, 2025 02:11 AM

Google News

ADDED : மே 04, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க, க.பரமத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான சின்னம்மநாயக்கனுார், ராஜபுரம், நம்பகவுண்டனுார், தொக்குப்பட்டி, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 2,000 ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்படுகிறது.

ஓராண்டு பயிரான மஞ்சளை, பொதுவாக ஆடி மாதம் விவசாயிகள் பயிரிட்டு, 11வது மாதத்தில் அறுவடை செய்வர். நாட்டு மஞ்சள் என்னும் விரலி மஞ்சள், 8ம் நம்பர், 10ம் நம்பர் என்னும் தடிமன் கொண்ட ஹைபிரிட் மஞ்சள் வகைகள் பயிரிடப்படுகின்றன.

இங்கு அறுவடையாகும் மஞ்சளை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் மட்டும் தனியார் வியாபாரிகளிடம் விற்கின்றனர். இடைத்தரகர்கள் மூலம் விற்பதால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள், கரூர் மாவட்டம் க.பரமத்தியில் அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஈரோடு, கள்ளக்குறிச்சி பகுதியில் மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டாலும், பெரும்பாலான விவசாயிகள் மஞ்சளில் போதிய லாபம் இல்லை எனக்கூறி கரும்பு, வாழை சாகுபடிக்கு மாறிவிட்டனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்து வருகிறது. இங்கு விளையும் மஞ்சளை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலத்தில் விற்கிறோம். ஆனால் அங்கு இடைத்தரகர்கள் தலையீட்டால், போதிய வருவாய் கிடைக்காமல் அவதியுறுகிறோம்.

எனவே கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் ஈரோட்டில் உள்ளது போல், ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டு, மஞ்சளை கொள்முதல் செய்தால் எங்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும் எங்கள் பகுதிக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களின் மொத்த வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்ய தயாராக உள்ளனர். அதற்கும் அரசு போதிய வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தால், விவசாயத்தில் மேலும் லாபம் கிடைக்கும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us