/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
/
ஊஞ்சலில் இருந்து தவறி விழுந்த மாணவன் பலி
ADDED : செப் 29, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊஞ்சலில் இருந்து தவறி
விழுந்த மாணவன் பலி
கரூர், செப். 29-
வெள்ளியணை அருகே, வீட்டில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த பள்ளி மாணவன், தவறி விழுந்து உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெத்துராஜ் என்பவரது மகன் விஷ்வா, 11; அதே பகுதியில் உள்ள, தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 27ல் வீட்டில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த விஷ்வா, திடீரென தவறி கீழே விழுந்தார். அதில், ஊஞ்சல் துணி கழுத்தில் சுற்றியதால், காயம் அடைந்த விஷ்வா, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.