sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விநாயகர் கோவில் அம்மனுக்கு காவிரி ஆற்று நீரில் அபிஷேகம்

/

விநாயகர் கோவில் அம்மனுக்கு காவிரி ஆற்று நீரில் அபிஷேகம்

விநாயகர் கோவில் அம்மனுக்கு காவிரி ஆற்று நீரில் அபிஷேகம்

விநாயகர் கோவில் அம்மனுக்கு காவிரி ஆற்று நீரில் அபிஷேகம்


ADDED : ஜன 01, 2025 06:05 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.பரமத்தி: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் அருகில் உள்ள, பெரியநடுப்பாளையம் மாரியம்மனை ஆண்டுதோறும் முக்கிய ஊர்களுக்கு பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து சென்று, அங்குள்ள கோவிலில் வைத்து வழிபாடு செய்து, மீண்டும் கோவிலுக்கு கொண்டு வருவது வழக்கம்.

இந்தாண்டு திருவிழா, சடையம்பாளையம் விநாயகர் கோவிலில் கடந்த, 15ல் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 28ல், பக்தர்கள் புறப்பட்டு பெரியநடுப்பாளையம் கோவில் சென்று, மாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து சென்று, புன்னை வனநாதர் கோவில், வரதராஜ பெருமாள், வீரஆஞ்சநேயர், கைலாசபுரம் செல்வகணபதி ஆகிய கோவில்கள் வழியாக கொண்டு வரப்பட்டு, சடையம்பாளையம் கோவிலை வந்தடைந்ததுடன் திருவிழா துவங்கியது.

நேற்று முன்தினம் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று காலை கிடாவெட்டு நிகழ்ச்சி, மாலை பொங்கல் வைக்கப்பட்டு ஒவ்வொரு பொங்கல் பானையிலும், பொங்கல் எடுக்கப்பட்டு அவை அனைத்தையும் ஒன்று சேர்த்து படையலிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடந்தது. பின், மஞ்சள் நீர் விளையாட்டு மாரியம்மன் திருவீதி உலா, அதனை தொடர்ந்து இரவு வாணவேடிக்கையுடன் அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.






      Dinamalar
      Follow us