sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை தேவை

/

ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை தேவை

ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை தேவை

ரயில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை தேவை


ADDED : ஜூலை 30, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை ரயில் சுரங்கப்பாதையில், தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை அருகில் ரயில்வே கேட் உள்ளது. இதன் அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை வழியாக, லாலாப்பேட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் காவிரி ஆறு, சிவன் கோவில் ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் சுரங்கப்பாதை அருகில் சிறிய பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை புதிய வாய்க்கால் செல்கிறது.

வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் செல்கிறது. தண்ணீர் செல்லும் போது ரயில்வேகேட் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி பாசம் பிடித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது, சிரமப்படுகின்றனர். எனவே, சுரங்கப்

பாதையில் நீர் தேங்காமல் இருக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us