/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நிழற்கூடத்தை சுற்றி புதர் அகற்ற நடவடிக்கை தேவை
/
நிழற்கூடத்தை சுற்றி புதர் அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : நவ 01, 2025 01:19 AM
கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை அருகே, நிழற்கூடத்தை சுற்றியுள்ள செடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி நெடுஞ்சாலை அருகில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை செயல்படுகிறது. நோயாளிகள் வசதிக்காக, நெடுஞ்சாலையோரம் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நிழற்கூடத்தை சுற்றி அதிகமான செடிகள் புதர்போல் வளர்ந்துள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பயணிகள் வசதிக்காக செடிகளை அப்புறப்படுத்தி, துாய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

