/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை
/
ஆதனுார் கிராமத்திற்கு நிரந்தரமாக மயானம் தேவை
ADDED : டிச 26, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, சிவாயம் பஞ்., ஆதனுார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் இறந்தவர்களின் சடலங்களை, தனியாருக்கு சொந்தமான இடத்தில் கடந்த, 50 ஆண்டுகளுக்கு மேலாக அடக்கம் செய்து வந்தனர்.
இந்நிலையில், தனியார் நிலத்தினர், தங்கள் நிலப்பகு-தியில் வரக்கூடாது என தெரிவித்து விட்டனர். எனவே, இறந்தவர்-களின் சடலங்களை அடக்கம் செய்ய, நிரந்தரமான மயானத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள், கலெக்-டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

