/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுக்களை கவர அ.தி.மு.க., நிர்வாகிகள் புதிய திட்டம்
/
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுக்களை கவர அ.தி.மு.க., நிர்வாகிகள் புதிய திட்டம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுக்களை கவர அ.தி.மு.க., நிர்வாகிகள் புதிய திட்டம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுக்களை கவர அ.தி.மு.க., நிர்வாகிகள் புதிய திட்டம்
ADDED : பிப் 01, 2024 03:36 PM
கரூர்:அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட் டுக்கள், குடும்ப ஓட்டுக்களை கைப்பற்ற, வீடு தேடி செல்லும் முயற்சியில் அ.தி.மு.க., வினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி ஒதுக் கீடு, வேட்பாளர் தேர்வு என, பிஸியாக உள்ளனர்.இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்களை பெறவும், அவர்களது குடும்பத்தினர் ஓட்டுக்களை கவரவும், அ.தி.மு.க., வினர், பூத் வாரியாக தனி ஆட்களை நியமித்துள்ளனர்.இதுகுறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அ.தி.மு.க., வுக்கு பெரும்பாலும் ஓட்டு போட மாட்டார்கள். அவர்களின் தபால் ஓட்டுக்களும், பெரும்பாலும், தி.மு.க., வுக்குதான் விழும். இந்நிலையில், புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், தி.மு.க., அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஓட்டுக்களை வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு எதிராக விழ வாய்ப்புண்டு. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் ஓட்டுக்களை பெற வீடு தேடி செல்ல வேண்டும் என, தலைமை உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியாக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதி வாரியாக, தபால் ஓட்டுக்கள் குறித்த விபரம் உள்ளது.அதை வைத்து கொண்டு, அவர்களது வீட்டுக்கு செல்ல உள்ளோம். தபால் ஓட்டு போட உதவி செய்வதுடன், குடும்ப உறுப்பினர்களின் ஓட்டுக்களையும் சேகரிக்க, தனியாக நியமிக்கப்பட்டுள்ள, பூத் கமிட்டி உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று, தி.மு.க., வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பிரச்சாரம் செய்யவும் திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு தெரிவித்தனர்.