/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.29.31 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.29.31 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : நவ 13, 2024 03:44 AM
கரூர்:கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தேங்காய் சாகுபடி நடக்கிறது. விவசாயிகள் கொப்பரை, தேங்காய்களை, நொய்யல் அருகில் உள்ள சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நடக்கும் ஏலத்துக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 1,980 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கிலோ குறைந்தபட்ச விலையாக, 35.15 ரூபாய், அதிகபட்ச விலையாக, 45.05 ரூபாய்; சராசரி விலையாக, 43.25 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 625 கிலோ தேங்காய்கள், 26 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையானது.
கொப்பரை தேங்காய், 460 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல்தரம் கிலோ குறைந்தபட்ச விலையாக, 133.87 ரூபாய், அதிகபட்ச விலையாக, 137.09 ரூபாய், சராசரி விலையாக, 136.09 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக, 96.89 ரூபாய், அதிகபட்ச விலையாக, 133.49 ரூபாய், சராசரி விலையாக, 115.99 ரூபாய்க்கும் ஏலம் போனது.மொத்தமாக, 22,901 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 27 லட்சத்து, 10 ஆயிரத்து, 32 ரூபாய்க்கு விற்பனையானது. 21 மூட்டை எள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சிவப்பு ரகம் கிலோ குறைந்தபட்ச விலையாக, 127.06 ரூபாய், அதிகபட்ச விலையாக, 132.39 ரூபாய்க்கும், சராசரி விலையாக, 128. 39 ரூபாய், வெள்ளை ரகம் கிலோ குறைந்த பட்ச விலையாக, 118.19 ரூபாய், அதிகபட்ச விலையாக, 126. 99 ரூபாய்க்கும், சராசரி விலையாக 122.59 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 1,510 கிலோ எடையுள்ள எள், 1 லட்சத்து 94 ஆயிரத்து 284 ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய், கொப்பரை தேங்காய், எள் ஆகியவை மொத்தம், 29 லட்சத்து, 31 ஆயிரத்து,116 ரூபாய்க்கு விற்பனையானது.