sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செட்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டுள்ள அமராவதி ஆறு

/

செட்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டுள்ள அமராவதி ஆறு

செட்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டுள்ள அமராவதி ஆறு

செட்டிபாளையம் தடுப்பணையில் தண்ணீர் திறக்கப்படாததால் வறண்டுள்ள அமராவதி ஆறு


ADDED : மே 02, 2025 01:52 AM

Google News

ADDED : மே 02, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:

கரூர் மாவட்ட மக்களின் விவசாய தேவை, குடிநீர் தேவைகளை அமராவதி ஆறு பூர்த்தி செய்கிறது.

பழனி மலைத்தொடருக்கும், ஆனைமலை தொடருக்கும் இடையே உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி, சிறு ஓடையாக வந்து இதனுடன் பாம்பாறு, சின்னாறு, தேவாறு, குடகனாறு, உப்பாறு, சண்முகா நதி உள்ளிட்ட பல கிளை ஆறுகள் இணைந்து பெரிய ஆறாக உருவெடுத்து வளம் சேர்க்கிறது அமராவதி ஆறு.

திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அமராவதி ஆறு, கரூர் மாவட்டம், திருமுக்கூடலுார் என்ற இடத்தில் காவிரியில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை.

வடகிழக்கு பருவமழை காலங்களில், திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் பட்சத்தில், அமராவதி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும்.

அப்போது, கரூர் நோக்கி வரும் தண்ணீர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள கதவணையில் தேக்கி வைத்து, பாசன கால்வாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்படும். நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு, 6 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இங்குள்ள பாசன வாய்க்கால்களில், 25 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், செட்டிபாளையம் தடுப்பணையில் சிறிய அளவில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பணையில் இருந்து நீர் திறக்கப்படாததால், ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, அமராவதி அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என, விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us