sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குப்பை தொட்டியாக மாறும் அமராவதி பாசன வாய்க்கால்

/

குப்பை தொட்டியாக மாறும் அமராவதி பாசன வாய்க்கால்

குப்பை தொட்டியாக மாறும் அமராவதி பாசன வாய்க்கால்

குப்பை தொட்டியாக மாறும் அமராவதி பாசன வாய்க்கால்


ADDED : செப் 13, 2024 06:47 AM

Google News

ADDED : செப் 13, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், அமராவதி ஆற்றின் பாசன வாய்க்கால் குப்பை தொட்டியாக மாறி வருவதால், விளை நிலங்கள் தண்ணீர் கிடைக்காமல் வறண்ட பூமியாக மாறி வருகிறது.

கரூர் மாவட்டம், செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பாசன பகுதிகளில், பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன் மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. திருக்காம்புலியூர், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசுகாலனி ஆகிய பகுதிகள், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜவாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த வாய்க்கால்கள், பல ஆண்டுகளாக முறையாக துார்வாரப்படாமல் உள்ளதால் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு, குப்பை தொட்டியாக மாறி இருப்பதால் வாய்க்கால்கள் பாதையே தெரியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி, பஞ்., மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து, வெளியேறும் கழிவுநீரை எந்த சுத்தகரிப்பும் இல்லாமல், நேரடியாக வாய்க்காலில் கலக்கும் வகையில் விடுகின்றனர். அமராவதி ஆற்று கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து கள்ளத்தனமாக சாயக் கழிவுநீரும் வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கழிவுநீர் கலந்த தண்ணீர் விவசாய நிலங்களுக்கு பாய்வதால், அவை மலட்டு தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தற்போது பலர் விவசாயத்தை விட்டு வெளியேறி வருவதால், விளை நிலங்கள், விலை நிலங்களாக மாறி வரும் அவல நிலை தொடர்கிறது. இது குறித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டாலும், பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கிறோம் என, சொல்வதோடு முடித்து கொள்கின்றனர். எனவே, ஆறு, வாய்க்கால் மாசுபடுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us