sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறும்அமராவதி பாசன வாய்க்கால்

/

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறும்அமராவதி பாசன வாய்க்கால்

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறும்அமராவதி பாசன வாய்க்கால்

கழிவுநீர் தேங்கும் இடமாக மாறும்அமராவதி பாசன வாய்க்கால்


ADDED : நவ 21, 2025 01:47 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர், அமராவதி ஆற்றின் பாசன வாய்க்கால் கழிவுநீர் ஓடும் வாய்க்காலாக மாறி வருகிறது.கரூர் மாவட்டம், செட்டிபாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் இருந்து பாசன பகுதிகளில், பல்வேறு வாய்க்கால்கள் செல்கின்றன. இதன் மூலம், 4,500 ஏக்கர் சாகுபடி நடந்து வருகிறது. திருக்காம்புலியூர், குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம், பாலம்மாள்புரம், அரசுகாலனி ஆகிய பகுதிகள், அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் ராஜவாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த வாய்க்கால்கள், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளதால் முற்றிலும் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பு, குப்பை தொட்டியாக மாறி இருப்பதால், வாய்க்கால் பாதையே தெரியாத நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பஞ்., மற்றும் மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து, வெளியேறும் கழிவுநீரை எந்த சுத்திகரிப்பும் இல்லாமல், நேரடியாக வாய்க்காலில் கலக்கும் வகையில் விடுகின்றனர்.எனவே ஆறு, வாய்க்கால் மாசுபடுவதை தடுக்கவும், நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us