/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்பேத்கர் கல்வி இயக்கத்தின் 74வது இரவு பாடசாலை
/
அம்பேத்கர் கல்வி இயக்கத்தின் 74வது இரவு பாடசாலை
ADDED : ஜன 21, 2026 11:11 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த நத்தம்பட்டி கிராமத்தில், தமிழ்நாடு அம்-பேத்கர் கல்வி இயக்கம் சார்பில், டாக்டர் அப்பேத்கர் இரவு பாட-சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நத்தம்பட்டி கிராமத்தின் ஊர் நாயக்கர்கள் தலைமை வகித்-தனர். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் கல்வி இயக்க நிறுவனர் மாரியப்பன் பேசியதாவது: கிராமப்புற மாணவ மாணவியர் கல்-வியிலும், வேலைவாய்ப்புகளிலும் முன்னேறுவதற்காக, டாக்டர் அம்பேத்கர் கல்வி இயக்கம், 2023ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கரூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, கடலுார், அரியலுார், புதுக்-கோட்டை, திருவள்ளுர் மாவட்டங்களில், 73 அம்பேத்கர் இரவு பாடசாலை மையங்கள் உள்ளன. இதில் 1,432 மாணவ, மாண-வியர் மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை படித்து வரு-கின்றனர். தற்போது நத்தம்பட்டியில், 74வது இரவு பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இவ்வாறு பேசினார்.ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

