/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் திருவிழா கிளி வாகனத்தில் அம்மன் உலா
/
மாரியம்மன் கோவில் திருவிழா கிளி வாகனத்தில் அம்மன் உலா
மாரியம்மன் கோவில் திருவிழா கிளி வாகனத்தில் அம்மன் உலா
மாரியம்மன் கோவில் திருவிழா கிளி வாகனத்தில் அம்மன் உலா
ADDED : ஜூன் 02, 2025 04:01 AM
கரூர்: வைகாசி திருவிழாவையொட்டி, கரூர் மாரியம்மன் கோவிலில், கிளி வாகனத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தமிழக அளவில், கரூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. நடப்பாண்டு, கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ரிஷபம், புலி, பூத வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், கஜலட்சுமி வாகனம் என, பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது.தொடர்ந்து தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். கடந்த, 28ல் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நடந்தது.
நேற்று கிளி வாகனம் அம்மன் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று வேப்பமர வாகனம், 3ல் பின்னமர வாகனத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். 4ல் புஷ்ப அலங்காரம், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல், 8ல் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.