/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
/
சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி
ADDED : நவ 22, 2025 02:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், குந்தாணிபாளையம், நத்தமேடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையொட்டி, சிறப்பு அலங்காரம் நடந்தது.
பிரசித்தி பெற்ற, குந்தாணிபாளையம் நத்தமேடு அங்காள பரமேஸ்வரி கோவிலில், கார்த்திகை மாத வெள்ளிக்கிழமையொட்டி, மூலவர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. அதை தொடர்ந்து, சந்தன காப்பு மற்றும் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில், மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

