/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் மாநாடு
/
அங்கன்வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் மாநாடு
ADDED : மார் 17, 2025 04:43 AM
குளித்தலை,: குளித்தலை அடுத்த தோகைமலையில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் முதல் மாநாடு நடந்தது.
மாவட்ட செயலாளர் சாந்தி தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர்கள் புஷ்பவள்ளி, ராணி, ஒன்றிய தலைவர் எப்-ஸிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டியு., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், துணை தலைவர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., குளித்தலை ஒன்றிய செயலாளர் வாசுகி ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக பணியமர்த்த வேண்டும். குறைந்தபட்ச ஊதி-யமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 26,000 ரூபாயாகவும், அங்-கன்வாடி உதவியாளர்களுக்கு, 21,000 ரூபாயாகவும் வழங்க நடவ-டிக்கை எடுக்க வேண்டும். பணிக்கொடையாக, அங்கன்வாடி ஊழியர்களுக்கு, 10 லட்சம் ரூபாய், அங்கன்வாடி உதவியாளர்க-ளுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.