/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெருங்கும் பொங்கல்: இடு பொருட்கள் தயாரிக்க கரூரில் குவிந்த ராஜஸ்தானியர்
/
நெருங்கும் பொங்கல்: இடு பொருட்கள் தயாரிக்க கரூரில் குவிந்த ராஜஸ்தானியர்
நெருங்கும் பொங்கல்: இடு பொருட்கள் தயாரிக்க கரூரில் குவிந்த ராஜஸ்தானியர்
நெருங்கும் பொங்கல்: இடு பொருட்கள் தயாரிக்க கரூரில் குவிந்த ராஜஸ்தானியர்
ADDED : ஜன 02, 2024 11:30 AM
கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, விவசாய இடுபொருட்களை விற்பனை செய்ய, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள், கரூரில் குவிந்துள்ளனர்.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான, பொங் கல் வரும், 14,15,16 ஆகிய தேதிகளில் சிறப் பாக கொண்டாடப்படுகிறது. அப்போது, விவசாய பணிகளுக்கு தேவைப்படும், இரும்பிலான இடுபொருட்களை விவசாயிகள் புதிதாக வாங்குவது வழக்கம்.
இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, 30 க்கும் மேற்பட்ட இரும்பு இடுபொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் கரூரில் குவிந்து ள்ளனர். தான்தோன்றிமலை, புலியூர், வெங்க மேடு, வெள்ளியணை உள்ளிட்ட இடங்க ளில், ராஜஸ்தான் மாநில தொழிலளார்கள் சாலையோரம் புதிதாக கடை வைத்துள்ளனர்.
அதில், கத்தி, கடப்பாறை, மம்மட்டி உள்ளி ட்ட விவசாய பணிளுக்கு தேவைப்படும் பொ ருட்களை, உடனடியாக தயார் செய்து கொடு க்கின்றனர்.
குறைந்தப்பட்சம், 250 ரூபாயில், 1,500 ரூபாய் வரை பல்வேறு இரும்பு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொருட்கள் கண் எதிரே தயார் செய்யப்படுவதால், பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின் றனர்.

