ADDED : டிச 27, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து குறைந்தது.
கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 7,532 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 7,370 கன அடியாக குறைந்தது. அதில் சம்பா சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 6,950 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.78 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

