/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வு
/
குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வு
குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வு
குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் இயற்கை வளம் குறித்து விழிப்புணர்வு
ADDED : ஆக 21, 2024 02:56 AM
குளித்தலை:குளித்தலை அடுத்த கழுகூரில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று பனை விதை நடவு மற்றும் அதன் தன்மைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கழுகூர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
இதில், குளித்தலை - மணப்பாறை மெயின் ரோடு, கழுகூர் பிரிவு ரோடு, கழுகூர் பெரிய ஏரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில், பனை விதைகளை நடவு செய்தனர்.
பின், பனை மரம் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள், மரங்களின் தன்மைகள், இயற்கையோடு கூடிய சுற்றுச்சூழல்களை எப்படி பாதுகாப்பது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கழுகூர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், குழந்தைகள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.