/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு
/
போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு
ADDED : மே 22, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் டவுன் போக்குவரத்து போலீசார் சார்பில், ெஹல்மெட் குறித்த விழிப்புணர்வு பிரசாரம், மனோகரா கார்னரில் நேற்று மாலை நடந்தது.
அதில், டூவீலர்களில் செல்பவர்கள் ெஹல்மெட் அணிவதன் அவசியம், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது குறித்து, போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., அர்ஜூன் விளக்கம் அளித்து பேசினார். பிறகு, பொதுமக்களுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த, துண்டு பிரசுரங்களை எஸ்.ஐ., ஆறுமுகம் வழங்கினார். நிகழ்ச்சியில், போக்குவரத்து போலீசார் பங்கேற்றனர்.