புகழூர் தீயணைப்பு நிலையத்தில் 6,7ல், விழிப்புணர்வு நிகழ்ச்சி
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் 6,7ல், விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 04, 2026 05:02 AM
அ நிறம் | அளவு
கரூர்:புகழூர் தீயணைப்பு நிலையத்தில், இரண்டு நாட்கள் தீ பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து, புகழூர் தீயணைப்பு நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கரூர்
மாவட்டம், புகழூர் தீயணைப்பு நிலையத்தில் வரும், 6 மற்றும், 7ல் தீ
பாதுகாப்பு தொடர்பாக, 'வாங்க கற்று கொள்வோம்' என்ற தலைப்பில்,
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 11:00 மணி முதல் மதியம்,
12:00 மணி வரையிலும், மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி வரையிலும்
நடக்கவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
