sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

/

கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கார்த்திகை மாதம் தொடக்கம் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்


ADDED : நவ 17, 2024 01:53 AM

Google News

ADDED : நவ 17, 2024 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்த்திகை மாதம் தொடக்கம்

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்

கரூர், நவ. 17-

கார்த்திகை மாதம் தொடங்கியதால், கரூரில் ஐயப்ப பக்தர்கள் நேற்று மாலை அணிந்து கொண்டனர்.

கேரளா மாநிலம், சபரிமலையில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக, நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. நேற்று கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில், 48 நாட்கள் விரதம் இருந்து, சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.

கரூர் ஐயப்பன் சுவாமி கோவிலில், நேற்று அதிகாலை மூலவர் சிலைக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. அதைதொடர்ந்து, விரதம் தொடங்கிய பக்தர்கள் மாலை அணிந்தனர்.

அதேபோல், வெண்ணைமலை ஐயப்பன் கோவில், கருப்பத்துார் ஐயப்பன் கோவில், காந்தி கிராமம் ஐயப்பன் கோவில்களிலும், பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல, நேற்று மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் காவிரி ஆற்றின் கரை அருகில் ஐயப்பன் கோவில் உள்ளது. ஆற்றில் பக்தர்கள் குளித்து விட்டு, காவி துணி அணிந்து வந்து, முறைப்படி ஐயப்பன் சன்னதியில் மாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கரூர், குளித்தலை, லாலாப் பேட்டை, பஞ்சப்பட்டி, கிருஷ்ணராயபுரம், மணவாசி, மாயனுார், புலியூர், சேங்கல், தோகைமலை, கழுகூர் பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us