sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்,வெள்ளை பூசணி விற்பனை ஜோர்

/

ஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்,வெள்ளை பூசணி விற்பனை ஜோர்

ஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்,வெள்ளை பூசணி விற்பனை ஜோர்

ஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்,வெள்ளை பூசணி விற்பனை ஜோர்


ADDED : அக் 01, 2025 02:09 AM

Google News

ADDED : அக் 01, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:ஆயுதபூஜையையொட்டி, வெள்ளை பூசணி, வாழைத்தார் விற்பனை நேற்று ஜோராக நடந்தது.

ஆயுத பூஜையையொட்டி, வெள்ளை பூசணி கரூரில் விற்பனைக்கு குவிந்துள்ளது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, இன்றும், நாளையும் கொண்டாடப்படுகிறது. அப்போது வர்த்தக நிறுவனங்கள், வீடுகளில் திருஷ்டி பரிகாரத்துக்காக நீர்ப்பூசணி என அழைக்கப்படும் வெள்ளை பூசணியை கட்டுவது வழக்கம். மேலும், சிலர் வெள்ளை பூசணியை திருஷ்டி கழித்து, சாலையில் உடைப்பர்.

இதனால், வெள்ளை பூசணி கரூர் காமராஜ் தினசரி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைக்கு அதிகளவில் வந்துள்ளது. கரூர் மாவட்டத்தில், வெள்ளை பூசணி சாகுபடி அதிகளவில் இல்லை. இதனால், திண்டுக்கல், அரியலுார், தேனி மாவட்டங்களில் இருந்து வெள்ளை பூசணி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு கிலோ, 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

* ஆயுத பூஜையையொட்டி, நேற்று கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், வாழைத்தார்கள் விற்பனைக்கு குவிந்தது. பூவன் தார், 600 ரூபாய், கற்பூரவள்ளி, 500 ரூபாய், ரஸ்தாளி, 450 ரூபாய்க்கு ஏலம் போனது.






      Dinamalar
      Follow us