/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொடர் மழைப்பொழிவால் வாழைத்தார் விற்பனை மந்தம்
/
தொடர் மழைப்பொழிவால் வாழைத்தார் விற்பனை மந்தம்
ADDED : நவ 24, 2025 01:17 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கள்ளப்பள்ளி, கருப்-பத்துார், பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீர-வள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார், கம்மநல்லுார், திருக்காம்புலியூர் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்-பனை செய்து வருகின்றனர்.
இதில், ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 125 ரூபாய், பூவன், 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. மழைக்காலம் என்பதால், வாழைத்தார் விற்பனை மந்த நிலையில் காணப்பட்டது. வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

