ADDED : ஜூலை 06, 2025 01:11 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சீரான விலையில் வெற்றிலை விற்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கள்ளப்பள்ளி, கருப்பத்துார், சிந்தலவாடி, திருக்காம்புலியூர் பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளி, 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 100 கவுளி கொண்ட மூட்டை, 4,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெற்றிலைகளை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து வாங்கி, சில்லரை விற்பனைக்காக திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேலுார், கரூர், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. முகூர்த்த சீசன் இல்லாததால், சீரான விலையில் வெற்றிலை விற்பனை நடந்து வருகிறது.