ADDED : ஆக 23, 2025 01:48 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, வீரகுமாரன்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய இடங்களில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். வெற்றிலை பயிர்களுக்கு, வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
வெற்றிலைகள், 100 கவுளி கொண்ட ஒரு மூட்டையாக கட்டி, லாலாப்பேட்டை வெற்றிலை கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம், 100 கவுளி கொண்ட மூட்டை, 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது விலை உயர்வு இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 100 வெற்றிலைகள் கொண்ட ஒரு கவுளி, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் வெற்றிலை கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளில் சில்லரை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.