/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது
/
மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது
மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது
மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த பா.ஜ., நிர்வாகி கைது
ADDED : அக் 07, 2024 03:42 AM
கரூர்: கரூர் அருகே, மரக்கன்றுகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடித்த-தாக, பா.ஜ., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், நொய்யல் முத்தனுார் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன், 46; கரூர் மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர். இவர், அதே பகுதியை சேர்ந்த பத்மாவதி, 70, என்பவர் வளர்த்து வரும் மரக்கன்றுகளுக்கு, கடந்த, 4ல் பூச்சிக்கொல்லி மருந்தை அடித்-துள்ளார்.
இதுகுறித்து, பத்மாவதி தட்டி கேட்டுள்ளார். அப்போது, ஆத்தி-ரமடைந்த தனசேகரன், அவரது மனைவி புவனேஷ்வரி, 42, ஆகியோ ர் தகாத வார்த்தை பேசி, பத்மாவதியை அடித்துள்ளனர். இதனால், பத்மாவதி அளித்த புகார்படி,
வேலாயுதம்பாளையம் போலீசார் தனசேகரனை கைது செய்தனர்.