ADDED : மார் 17, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், சின்ன வடுகப்பட்டி நாவல் நகரை சேர்ந்த செல்லமுத்து மகன் மோகன்ராஜ், 36; இவர் கடந்த, 9 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை.
நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் மோகன்ராஜ் செல்ல-வில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மோகன்ராஜின் சகோதரர் ரவீந்திரன், 39, போலீசில் அளித்த புகார்படி, வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.