sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தானியங்கி பம்பு செட் கருவி மானியத்தில் வாங்க அழைப்பு

/

தானியங்கி பம்பு செட் கருவி மானியத்தில் வாங்க அழைப்பு

தானியங்கி பம்பு செட் கருவி மானியத்தில் வாங்க அழைப்பு

தானியங்கி பம்பு செட் கருவி மானியத்தில் வாங்க அழைப்பு


ADDED : நவ 28, 2024 01:08 AM

Google News

ADDED : நவ 28, 2024 01:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானியங்கி பம்பு செட் கருவி

மானியத்தில் வாங்க அழைப்பு

கரூர், நவ. 28-

கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கை:

கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம் மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது. இக்கருவியை பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை வீட்டில் இருந்தபடியும், வெளியூர்களில் இருந்தபடியும் இயக்கவும், நிறுத்தவும்முடியும். இதற்கு மானியமாக சிறு,குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 7,000 ரூபாய்- வரை மானியமாக

வழங்கப்படும்.

மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய்- வரை மானியமாக வழங்கப்படும். மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு, 152ம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, 5ம் என மொத்தம், 157 பம்புசெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் கரூர் மற்றும் குளித்தலை வேளாண் பொறியியல்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் 9443404531 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில்,

கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us