/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை
/
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை
ADDED : மே 26, 2025 04:10 AM
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டியில், கற்பூர-வள்ளி வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, சிந்-தலவாடி, நந்தன்கோட்டை, மகாதானபுரம், கருப்பத்துார், கள்ளப்-பள்ளி, பொய்கைப்புத்துார் ஆகிய பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். விளையும் வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதில், ரஸ்தாளி வாழைத்தார், 450 ரூபாய், பூவன், 300 ரூபாய், கற்பூரவள்ளி, 200 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்-பட்டது. வைகாசியில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடந்ததால், வாழைத்தார் விற்பனை ஜோராக நடந்தது.