/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அட்டை பெட்டி உற்பத்தியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
/
அட்டை பெட்டி உற்பத்தியாளர் சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : அக் 01, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அட்டை பெட்டி உற்பத்தியாளர்
சங்க ஆலோசனை கூட்டம்
கரூர், அக். 1-
தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
அதில், திருப்பூரில் நடந்த, 29 வது மகா சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்துவது, பேப்பர் விலை உயர்வு காரணமாக, அட்டை பெட்டி விலையை, 15 சதவீதம் உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட முன்னாள் தலைவர் திருமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜெகன் உள்பட பலர் பங்கேற்றனர்.