ADDED : மார் 31, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், மண்மங்கலம் வி.ஏ.ஓ., சுரேஷ்குமார், 40; வரு-வாய்த்துறை ஊழியர்களுடன், நேற்று முன்தினம், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை செம்மடை ரவுண்டானா பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காவிரியாற்றில் இருந்து, டாரஸ் லாரியில், ஆறு யூனிட் மணல் கடத்தி வந்ததாக, உரிமையாளர் தினேஷ்குமார், 45, டிரைவர் தீபக், 31, ஆகியோர் மீது, வி.ஏ.ஓ., சுரேஷ்குமார் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, தினேஷ்குமார், தீபக் மீது வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.