/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு
/
ஆற்று மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு
ADDED : டிச 07, 2024 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: .க.பரமத்தி அருகே, டிப்பர் லாரியில் ஆற்று மணலை கடத்தியதாக உரிமையாளர்,
டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கரூர் மாவட்ட கனிம வளத்துறை உதவி அலுவலர் சங்கர், 41, உள்ளிட்ட ஊழியர்கள் நேற்று முன்தினம் கோவை சாலை
க.பர-மத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, டிப்பர் லாரியில் ஆறு யூனிட் ஆற்று மணல் கடத்தியது
தெரிய வந்தது. இதுகுறித்து, கனிம வளத்துறை உதவி அலுவலர் சங்கர், போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து, டிப்பர் லாரி உரிமையாளர் சின்ராசு, 45; டிரைவர் விஸ்வநாதன், 41; ஆகியோர் மீது, க.பரமத்தி போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.