sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு

/

ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு

ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு

ஸ்டேஷனில் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவரை வெட்டிய 5 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 11, 2025 05:43 AM

Google News

ADDED : ஆக 11, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கேப்பேட்டை பஞ்., புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 47; விவசாயி. இவர் கடந்த, 3ல், தனக்கு சொந்தமான காரில், கட்டளைமேட்டு வாய்க்கால் கரை, சீகம்பட்டி வழியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, வீரக்குமாரன்பட்டியை சேர்ந்த பிரபா-கரன் மற்றும் இருவர், டூவீலரை நடுவழியில் நிறுத்தி, காருக்கு வழிவிடாமல் நின்றுகொண்டி-ருந்தனர். தர்மராஜ் தட்டிக்கேட்டதால், இரு தரப்-பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரபா-கரன் கொடுத்த புகார்படி, லாலாப்பேட்டை போலீசார், தர்மராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தர்மராஜ், லாலாப்பேட்டை போலீசில், தினமும் காலை, 10:00 மணிக்கு கையெழுத்திட்டு வரவேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று காலை, போலீஸ் ஸ்டேஷன் வந்த தர்மராஜ், கையெழுத்திட்டார். பின், 11:00 மணிக்கு தன் டூவீ-லரில், லாலாப்பேட்டை-வீரவள்ளி நெடுஞ்-சாலை, வீரக்குமாரன்பட்டி அருகே சென்று-கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த, ஐந்து பேர் டூவீலரை மறித்தனர். பின், மறைத்து எடுத்து வந்திருந்த அரிவாளால், தர்மராஜின் தலை, கைகளில் வெட்டிவிட்டு

தப்பினர்.

பலத்த காயமடைந்த தர்மராஜ், கரூர் அரசு மருத்-துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாலாப்பேட்டை போலீசார், சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் மீது வழக்குப்ப-திந்து விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us