/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
/
வேலி போடுவதில் தகராறு இருதரப்பினர் மீது வழக்கு
ADDED : ஜூன் 23, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கீழ தாளியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், 70; இவர் கடந்த, 19 மாலை, 5:00 மணிக்கு தன் வீட்டை சுற்றி வேலி அமைத்தார்.
அப்போது அவரது தம்பி சேட்டு, வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்-துள்ளார். சேட்டுவின் மனைவி தங்கம்மாள், துரைராஜ் அவரது மனைவி அமிர்தம் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையில் பேசி, கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த துரைராஜ், குளித்தலை அரசு மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகார்படி, இரு-தரப்பினர் மீதும் குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.