/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு
/
பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு
பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு
பட்டா நிலத்தில் மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள் மீது வழக்கு
ADDED : ஆக 01, 2025 01:22 AM
குளித்தலை, பட்டா நிலத்தில் இருந்து, அனுமதியின்றி மண் எடுத்ததாக நில உரிமையாளர்கள், 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குளித்தலை அடுத்த கூடலுார் கிராமத்தில், நேற்று முன்தினம் மண்டல துணை தாசில்தார் நீதிராஜன், ஆர்.ஐ. முத்துக்கண்ணு, வி.ஏ.ஓ., ராமநாதன் ஆகியோர் கிராம தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 7 சர்வே எண்களில் பட்டா நிலத்தில், இரண்டரை மீட்டர் ஆழத்தில் அனுமதி இல்லாமல் மண் எடுத்தது ஆய்வில் தெரியவந்தது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் மங்காம்பட்டி தேவராசு, லட்சுமணன், பெருமாள், பாலசுப்பிரமணியன், பாப்பாத்தி, லட்சுமி, மாரிமுத்து, தமிழரசி உள்பட 9 பேர் மீது, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.