sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தனியார் நிதி நிறுவனபங்குதாரர் மீது வழக்கு

/

தனியார் நிதி நிறுவனபங்குதாரர் மீது வழக்கு

தனியார் நிதி நிறுவனபங்குதாரர் மீது வழக்கு

தனியார் நிதி நிறுவனபங்குதாரர் மீது வழக்கு


ADDED : நவ 21, 2025 01:46 AM

Google News

ADDED : நவ 21, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, சீட்டு பணம் தராததால், தனியார் நிதி நிறுவன பங்குதாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் வெங்ககல்பட்டியை சேர்ந்தவர் தங்கராசு, 40. இவர், லாலாபேட்டையில் உள்ள ஆறு பெரியசாமி ஆதிசிவன் சிட்ஸ் பிரைவேட் நிதி நிறுவனத்தில், தனது மகன்கள் கணபதி, தேவசேனா பெயரில் ரூ.50 ஆயிரம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். 18வது சீட்டு தங்கராசுக்கு கிடைத்தது.

சீட்டு பணம், 25 நாட்களுக்குள் தருவதாக, நிதி நிறுவனத்தின் பங்குதாரர் புனவாசிப்பட்டியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறினார்.

ஆனால், பல நாட்களாகியும் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். ஆறு மாதங்களை கடந்தும் பணம் கொடுக்கவில்லை. பலமுறை நேரில் கேட்டபோது, போன் பே மூலம் பணம் அனுப்புவதாக கூறினார். பணம் அனுப்பவில்லை. அதேசமயம் சுரேஷ் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில், தங்கராசு கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, நிதி நிறுவன பங்குதாரர் சுரே ைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us